tamilnadu

img

மத்தியநேரடி வரிகள் வாரிய உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் ராஜினாமா

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் ராஜினாமா செய்துள்ளார். 
நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடும் நெருக்கடியில் உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் ராஜினாமா செய்துள்ளார். 

1982-ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி அதிகாரியாக பணி பெற்ற ரஞ்சன், டெல்லி வருமான வரித் துறையின் முதன்மை தலைமை ஆணையராக இருந்தார். தற்போது மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினராக உள்ள இவரது பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
அவர் தனது ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் குடும்ப பிரச்சினைக்காகவும் ஓய்வு பெற விரும்புவதாகவும் தன்னை அடுத்த 3 மாதங்களுக்குள் விடுவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.